க.பரமத்தி பகுதி கல் குவாரிகளில் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஆய்வு


க.பரமத்தி பகுதி கல் குவாரிகளில் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஆய்வு
x

க.பரமத்தி பகுதி கல் குவாரிகளில் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஆய்வு நடத்தப்பட்டது.

கரூர்

தென்னிலை, க.பரமத்தி, புன்னம் ஊராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் அரை இன்ச் ஜல்லி, முக்கால் இன்ச் ஜல்லி, ஒன்றரை இன்ச் ஜல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் எனப்படும் செயற்கை மணல்கள் தயார் செய்கின்றனர்.

இங்கு தயாராகும் பொருட்கள் கட்டுமான தேவைகளுக்காக கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். கரூரில் செயல்பட்டு வரும் பல்வேறு கல்குவாரிகளில் அரசு அனுமதி அளித்ததற்கு மேல் குழி தோண்டப்பட்டு கற்கள் வெட்டப்பட்டு வருவதாகவும், அரசு அனுமதி அளித்திருந்த காலம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் புகார் எழுந்தது.

இதையடுத்து க.பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரிகளை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெயபால் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது புகழூர் வட்டாட்சியர் முருகன், வருவாய்த்துறை மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story