நாமக்கல்லில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


நாமக்கல்லில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

நாமக்கல்லில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், விற்பனை உதவியாளர் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளன. அனைத்துவித கல்வி தகுதி உள்ளோரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

எனவே தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story