2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு

2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பாலியல் தொல்லை

கோபி அருகே உள்ள உக்கரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவருடைய வீட்டின் அருகில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது செந்தில்குமார், மாணவியிடம் நைசாக பேசி மிட்டாய் வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

20 ஆண்டு ஜெயில்

மேலும் இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செந்தில்குமாருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்தார். இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தனது நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.


Next Story