கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விலை உயர்வால் வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைவு


கருங்கல்பாளையம் சந்தையில்  மாடுகள் விலை உயர்வால் வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைவு
x

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விலை உயர்வால் வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விலை உயர்வால் வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

மாட்டுச்சந்தை

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 100 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 380 பசுமாடுகள், 250 எருமை மாடுகள் என மொத்தம் 630 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

வெளி மாநில வியாபாரிகள்

இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையிலும் விலை போனது. இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்.

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'கடந்த சில வாரங்களாக மாடுகளின் வரத்து அதிகமாக இருந்த போதிலும், தொடர் மழை, பாலுக்கான விலை உயர்வு போன்ற காரணத்தால் மாடுகளின் விலை ரூ.5 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்தனர். இதனால் இன்று (அதாவது நேற்று) கூடிய சந்தையில் 70 சதவீத மாடுகள் மட்டும் விற்பனையானது' என்றனர்.


Next Story