புஞ்சைபுளியம்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்


புஞ்சைபுளியம்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

புஞ்சைபுளியம்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி யாகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 3 யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது.

காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து புனித நீர் புறப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் பக்தி சொற்பொழிவும், 12 மணிக்கு திருக்கல்யாணமும், மதியம் 2.30 மணிக்கு சக்தி அழைத்தலும், மாலை 6.30 மணிக்கு சாமுண்டி அழைத்தலும், இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சவுடேஸ்வரி அம்மன் சிங்க வாகனத்தில் திருவீதி உலா வருதலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சவுடேஸ்வரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வருதலும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story