ஓடும் ரெயிலில் பீகார் பெண்ணுக்கு குவா, குவா


ஓடும் ரெயிலில் பீகார் பெண்ணுக்கு குவா, குவா
x

ஓடும் ரெயிலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

வேலூர்

காட்பாடி

ஓடும் ரெயிலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

நிறைமாத கர்ப்பிணி

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்துகுமார். இவருடைய மனைவி நேஹாகுமாரி (வயது 20). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் தனது தந்தையுடன் பீகார் மாநிலம் செல்ல பெங்களூருவில் இருந்து பாகல்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று பெங்களூருவில் இருந்து பயணம் செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை ரெயில் கடந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தார். வாணியம்பாடியை கடந்த போது வலி இன்னும் அதிகமானது. உடனே அருகில் இருந்த பெண் பயணிகள் மற்ற ஆண் பயணிகளை பக்கத்தில் உள்ள பெட்டிக்கு செல்ல கூறினர். இதையடுத்து அவருக்கு அங்கிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர்.

பெண் குழந்தை பிறந்தது

இதில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து காட்பாடி ரெயில்வே உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ரெயில் நேற்று மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. அப்போது அங்கு தயாராக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் பெண்ணையும், குழந்தையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரம்மபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் ரெயில் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றது.


Next Story