இடங்கணசாலை நகராட்சி அலுவலகம் முற்றுகை


இடங்கணசாலை நகராட்சி அலுவலகம் முற்றுகை
x

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்

இளம்பிள்ளை:

இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு கவுன்சிலர் அமுதா, மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதிக்கு சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நகராட்சி தலைவர் கமலக்கண்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். தொடர்ந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story