ஓட்டப்பிடாரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ஓட்டப்பிடாரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 23 Aug 2023 6:45 PM GMT)

ஓட்டப்பிடாரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியவியல் சட்டம் ஆகிய 3 சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் மத்திய அரசு பெயர் மாற்றம் செய்வதற்கு மசோதா தாக்கல் செய்திருப்பதற்கு எதிர்த்து ஓட்டப்பிடாரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மரகதவேல், நிர்வாக குழு உறுப்பினர்கள் விஜி, பாரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள் கோஷம் எழுப்பினர்.


Next Story