தொழுநோய் விழிப்புணர்வு முகாம்


தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

பரங்கிப்பேட்டையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

புதுச்சத்திரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கடலூர் மாவட்ட தொழுநோய் பிரிவு சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் பரங்கிப்பேட்டையில் நடந்தது. இதற்கு கடலூர் மாவட்ட தொழுநோய் பிரிவு மருத்துவர் சித்திரைச்செல்வி தலைமை தாங்கினார். இதில் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுதா பெருமாள் கலந்து கொண்டு தொழுநோயால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறினார். பின்னர் வீடு, வீடாக சென்று தொழுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து பி.முட்லூர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொழு நோய் பற்றி நலக்கல்வி அளிக்கப்பட்டது. மேலும் வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், சரண்ராஜ், மேற்பார்வையாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story