விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் தமிழ்வாணன் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story