சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 27 March 2023 8:30 PM GMT (Updated: 27 March 2023 8:30 PM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மாவட்ட மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி தெற்குகளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story