மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

நெல்லை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே கேட் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தாழையூத்து பசும்பொன்நகரை சேர்ந்த இசக்கியப்பன் (வயது 49) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story