மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 April 2023 6:45 PM GMT (Updated: 30 April 2023 6:46 PM GMT)

வெள்ளிச்சந்தை அருகே மது விற்றவர் கைது

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வெள்ளிச்சந்தை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். செக்கடிவிளை பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழகட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம் (வயது 46) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


Next Story