கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில அளவையர், மருந்தாளுநர் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் கலெக்டர் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில அளவையர், மருந்தாளுநர் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள்  கலெக்டர் தகவல்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில அளவையர், மருந்தாளுநர் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 1089 பணியிடங்களுக்கான நில அளவையர், வரைவாளர் தேர்விற்கும், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளுநர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நில அளவையர், வரைவாளர் பணி காலியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள வாயிலாகவும், மருந்தாளுநர் பணி காலியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுகளுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை(வியாழக்கிழமை) முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நில அளவையர், வரைவாளர் அல்லது மருந்தாளர் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு தங்களின் விவரத்தை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story