விழுப்புரம் அருகே லாரி டிரைவர் மர்ம சாவு


விழுப்புரம் அருகே லாரி டிரைவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 1 April 2023 6:45 PM GMT (Updated: 1 April 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள சின்னமடம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பலராமன் மகன் ராமதாஸ் (வயது 55), லாரி டிரைவரான இவர் எப்போதும் இரவில் அதே தெருவில் உள்ள அரச மரத்தடியில் படுத்து தூங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் ராமதாஸ் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி குடும்பத்தினர், அங்குள்ள அரசமரம் அருகில் சென்று பார்த்தபோது அங்கு ராமதாஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது 2 கால்களிலும் காயங்கள் இருந்தன. இதுகுறித்து ராமதாசின் மகன் கிரிதரன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது தந்தை ராமதாசின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸ் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story