லாட்டரிசீட்டுகள் விற்ற 12 பேர் கைது


லாட்டரிசீட்டுகள் விற்ற 12 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2023 6:45 PM GMT (Updated: 16 Feb 2023 6:45 PM GMT)

லாட்டரிசீட்டுகள் விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டிக்கும்-வைரவன்பட்டிக்கும் இடையில் ஒரு ஓட்டலின் பின்புறம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு பதுங்கி இருந்து சோதனையிட்டனர். அப்போது கீழச்சீவல்பட்டியை சேர்ந்த அழகப்பன் (வயது 70) என்பவவர் அங்கு வந்தார். பின்னர் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த சில்லறை லாட்டரி விற்பனையாளர்களும் லாட்டரி சீட்டுக்களை வாங்க அங்கு கூடினர்.

இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். மொத்த வியாபாரி அழகப்பன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்கள், 14 செல்போன்கள், ரூ.59 ஆயிரம், லாட்டரி டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story