லோயர்கேம்ப் பகுதியில் ஆண் பிணம்


லோயர்கேம்ப் பகுதியில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 1 April 2023 6:45 PM GMT (Updated: 1 April 2023 6:46 PM GMT)
தேனி

கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் காலனி பகுதியில் இட்லி கடைக்கு எதிரே மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு கடந்த ஒரு மாதமாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தினந்தோறும் வந்து மதுவாங்கி விட்டு பின்னர் இட்லி கடையில் பார்சல் வாங்கி வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் இட்லி கடை அருகே அந்த நபர் படுத்திருந்தார். வெகு நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் இட்லி கடை உரிமையாளர் சென்று அவரை எழுப்பினார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்சில் இருந்த ஊழியர்கள் அவரை சோதனை செய்தனர். அதில் அவர் இறந்தது தெரியவந்தது.

இதனால் அவர்கள் லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கருப்பு சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story