கிணற்றில் ஆண் பிணம்


கிணற்றில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 26 Jan 2023 6:46 PM GMT)

தேனி அருகே கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது.

தேனி

தேனி அருகே கோபாலபுரம் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்து கிணற்றுக்குள் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதனை பார்த்த விவசாயிகள் பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர். ஆனால், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்து கொடுவிலார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story