கிணற்றில் ஆண் பிணம்


கிணற்றில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 21 Feb 2023 7:00 PM GMT (Updated: 21 Feb 2023 7:01 PM GMT)

எரியோடு அருகே கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.

திண்டுக்கல்

எரியோடு அருகே உள்ள எரணசமுத்திரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணறு உள்ளது. 90 அடி ஆழ அந்த கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை அந்த கிணற்றில் 45 வயது ஆண் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் எரியோடு போலீசார் மற்றும் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் வந்தனர். அப்போது கிணற்றில் மிதந்த ஆணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் இறந்து கிடந்தவர் கோடு போட்ட டி-சர்ட் மற்றும் டவுசர் அணிந்திருந்தார். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story