2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் வடகட்டளை வெள்ளத்திடல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகன் ரஞ்சித் (வயது 20). இவர் விற்பனைக்காக போதை பொருள் வைத்திருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நாச்சியார்கோவில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது 2 கிலோ கஞ்சா வைத்திருந்த ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர்.


Next Story