சரக்கு வேனில் பேட்டரியை திருடியவர் கைது

மதுரையில் சரக்கு வேனில் பேட்டரியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை,
மதுரை சிந்தாமணி நெடுங்குளம் அம்மன் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 41). இவர் சொந்தமாக சரக்கு வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிந்தாமணி பகுதியில் வேனை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அதில் இருந்த பேட்டரி திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஞானசேகர் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிந்தாமணி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருப்பசாமி (21) பேட்டரி திருடியது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story