பெண்ணிடம் நகை பறித்தவர் கைது


பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
x

நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த டோல்கேட் முத்தனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி சங்கீதா (வயது 36). இவரும், இவரது மகள் ஷர்மிளாவும் (18) கடந்த மாதம் 30-ந்் தேதி காலை புதுப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றனர். புதுப்பேட்டை அருகே அக்ரஹாரம் மலையடிவார பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்ற சங்கீதா கழுத்தில் அணிந்து இருந்து 10 பவுன் நகையை பறித்து சென்றான்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நாட்டறம்பள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அமர் உல்லா (வயது 39) என்பதும், சங்கீதாவிடம் நகை பறித்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story