பேளுக்குறிச்சி அருகே பஸ் நிறுத்தத்தில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை


பேளுக்குறிச்சி அருகே  பஸ் நிறுத்தத்தில் ஆண் பிணம்  யார் அவர்? போலீசார் விசாரணை
x

பேளுக்குறிச்சி அருகே பஸ் நிறுத்தத்தில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

நாமக்கல்

சேந்தமங்கலம்:

பேளுக்குறிச்சி அருகே சிங்களாந்தபுரம் ஏரிக்கரை பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் வாகனம் மோதி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story