மண்ணச்சநல்லூர் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்


மண்ணச்சநல்லூர் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
x

மண்ணச்சநல்லூர் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் செல்வராஜ். இந்த போலீஸ் நிலையத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் கொடுக்க தினமும் வந்து செல்கின்றனர். சான்றுஆவணங்கள், செல்போன்கள் போன்றவற்றை தவறவிட்டவர்கள் இது குறித்து புகார் கொடுத்து நிவாரணம் பெற முறையிடுவது வழக்கம்.

இந்நிலையில் இதுபோன்ற புகார் கொடுக்க வருபவர்களிடம் செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் புகார்தாரருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் சப்-இன்ஸ்பெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு ஏட்டு செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். போலீஸ் ஏட்டு செல்வராஜ் மது விலக்கு பிரிவு, லால்குடி, துவரங்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story