மாரியம்மன் கோவில் திருவிழா


மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:45 PM GMT)

சென்னியநல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் தாலுகா தெற்கு சென்னியநல்லூர் கிராமத்தில் மும்மாரியம்மன் கோவிலில் பால்குடம்,காவடி, அபிஷேக, ஆராதனை விழா கடந்த 21-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று பால்குடம், காவடி அபிஷேக ஆராதனை விழா நடந்தது. முன்னதாக மஞ்சள் ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story