போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாயம்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாயம்
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாயமானார்

திருச்சி

திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்துகுமாரசாமி. இவர் உறையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் விமலாதேவி (வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டைவிட்டு சென்ற விமலாதேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் அமுதா பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.


Next Story