மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை


மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆம்பூரில் ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் இமானுவேல் (வயது 26). ஏ.சி. மெக்கானிக. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையைத் திறந்து பார்த்த போது இமானுவேல் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இமானுவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story