மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்- கலெக்டர்


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்- கலெக்டர்
x
தினத்தந்தி 14 Jan 2023 7:15 PM GMT (Updated: 14 Jan 2023 7:16 PM GMT)

தஞ்சை, கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சை, கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.

சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டாரம் வாரியாக சிறப்பு மருத்துவமுகாம் 14 ஒன்றியங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த மாதம் 2 ஒன்றியங்களில் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், காது மூக்கு தொண்டை, குழந்தைகள் நலம் ஆகிய பிரிவு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்க உள்ளனர். டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

தஞ்சை- கும்பகோணம்

தஞ்சை ஒன்றியத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை), கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள்

தஞ்சை மாவட்டத்தில் இதுநாள்வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story