நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்


நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
x

வேதாரண்யத்தில் நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகராட்சி வளாகத்தில் நடந்தது. முகாமை நகர் மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். டாக்டர் ராஜசேகர் தலைமையில் மருத்துவ குழுவினர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ரத்த பரிசோதனை, சர்க்கரைநோய் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம், துணைத் தலைவர் மங்களநாயகி, நகர்மன்ற உறுப்பினர்கள் உமா நடராஜன், மயில்வாகனம், அனிஸ் பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story