மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா பாசன பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 701 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 14 ஆயிரத்து 818 கன அடியாக குறைந்துள்ளது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.78 அடியாக இருந்தது.


Next Story