மிலாடி நபி, காந்திஜெயந்தியை முன்னிட்டுடாஸ்மாக் கடைகள் மூடல்


மிலாடி நபி, காந்திஜெயந்தியை முன்னிட்டுடாஸ்மாக் கடைகள் மூடல்
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மிலாடி நபி, காந்திஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வியாழக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டும், வருகிற அக்.2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3 ஆகிய உரிமதளங்களில் உள்ள மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை நடைபெறக்கூடாது. அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.


Next Story