பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்


பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் பி.துறிஞ்சிப்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி இரவு மாணவி கடைக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை கணேசன் பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story