பண மோசடி வழக்கில் தேடப்பட்டவர் கைது


பண மோசடி வழக்கில் தேடப்பட்டவர் கைது
x

பண மோசடி வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி ரோடு மகாராஜபுரம் பகுதியில் தங்கப்பாண்டி, பால்ராஜ், பெரியசாமி ஆகியோர் மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்கள் மளிகை பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் வாங்கியும், வியாபாரம் விரிவாக்கத்திற்காக கடன் வாங்கியும் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இதில் தேடப்பட்டு வந்த பெரியசாமியை நேற்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story