மொபட் திருடியவர் கைது


மொபட் திருடியவர் கைது
x

மொபட் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மருத்துவமனை முன்பு முகமது அப்பாஸ் (வயது 54) என்பவர் தனது மொபட்டை நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் அந்த மொபட் திருட்டுபோனது. இது தொடர்பாக அவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் மொபட்டை திருடியது திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தர்ராஜன்(51) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story