மொபட் திருடியவர் கைது


மொபட் திருடியவர் கைது
x

மொபட் திருடியவர் கைது

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 67). சலவை தொழிலாளி. இவர் மொபட்டில் களக்காடு புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். தனது நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்தார். அப்போது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை திருடியதாக களக்காடு ஜவகர்வீதியை சேர்ந்த நெல்சன்ராஜா (46) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மொபட் மீட்கப்பட்டது.


Next Story