மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்


மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் 3 நாட்கள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. முதல் நாள் நடைபெற்ற ஊர்வலம் ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைந்தது. இரண்டாம் நாள் ஊர்வலமாக இந்த ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான முத்துக்குடாவிற்கு வந்தடைந்தது. பின்னர் இந்திய வனவிலங்கு நிறுவனம், புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை, கடலோர காவல் துறை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இந்திய வனவிலங்கு நிறுவனத்தை சேர்ந்த ஸ்வேதாஐயர், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மேகலா ஆகியோர் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். கடல் பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் "கடல்பசுவை காப்போம், கடல்வாழ் உயிரினங்களை காப்போம், நமது பெருங்கடலை காப்போம்" என்ற செய்தியை பரப்பும் கோஷங்கள் முழங்க இந்த ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முத்துக்குடாவில் தொடங்கி மணமேல்குடி, கோடியக்கரை கடற்கரையில் முடிவடைந்தது. பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய வனஉயிர் நிறுவனத்தை சேர்ந்த அஜித்குமார், பிரவீன், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மணமேல்குடி வனஅலுவலர், அன்புமணி, சோனைமுத்து, வேட்டை தடுப்பு காவலர் முத்துராமன், கடலோர காவல் துறையினர், உள்ளூர் மீனவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story