மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை புதுகார்கானா தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45).

இவர் கடந்த 7-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடி உள்ளார்.

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது திருவண்ணாமலை தேவனந்தல் கிராமத்தை சேர்ந்த கமலகண்ணன் (44) என்பது தெரியவந்தது.

இதையடுத்து கமலகண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story