15-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்


15-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
x

பரோல் வழங்கக்கோரி 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுவிபத்து வரும் அவர், தனக்கு பரோல் வழங்கக்கோரி ஜெயில் அதிகாரிகளிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்தார். பாகாயம் போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு காரணமாக அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த முருகன் பரோல் வழங்கக்கோரி கடந்த 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயிலில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து பழங்களை மட்டும் சாப்பிட்டு வருகிறார். 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரிடம் ஜெயில் அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். ஜெயில் டாக்டர்கள் முருகனுடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.


Next Story