கிறிஸ்துமஸ்,ரம்ஜான் வாழ்த்து சொல்லும் எனது நண்பர் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை - தமிழிசை சவுந்தரராஜன்


கிறிஸ்துமஸ்,ரம்ஜான் வாழ்த்து சொல்லும் எனது நண்பர் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 1 July 2022 7:42 AM GMT (Updated: 1 July 2022 8:18 AM GMT)

அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும்,ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது என அவர் கூறியுள்ளார்.

வேலூர் ,

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் பாலாறு பெருவிழா நடந்து வருகிறது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருக்கும். அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மிகம் இல்லாமல் தமிழகம் இல்லை. ஆண்டாள் கற்றுக்கொடுத்த தமிழைதான் இன்று அனைவரது நாவிலும் தவிழ்ந்துக் கொண்டிருக்கிறது. ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை.

ஆன்மீகமும் காவியும் சேர்ந்ததுதான் தமிழகம். ஆனால் தமிழகத்தில் காவிக்கு சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. திறந்த வழிபாட்டோடு தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். இதனை புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம்.

அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும் .ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது. எனக்கு பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார்.மத நல்லிணக்கம் என பேசுகிறார். அவர்,' கிறித்துமஸ்க் கு வாழ்த்து சொல்லுவார். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லுவார்.ஆனால் தீபாளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்லமாட்டார். ஏனென்று கேட்டால் இதுவரை பதில் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story