கார் டிரைவர் மர்ம சாவு


கார் டிரைவர் மர்ம சாவு
x

வேடசந்தூரில் கார் டிரைவர் ஒருவர் தனது வீட்டு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). கார் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தனது வீட்டு முன்பு காலில் காயத்துடன் மர்மமான முறையில் ராேஜஷ் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் தடுமாறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது யாரும் அவரை தாக்கியதில் இறந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story