மாயமான விவசாயி, தோட்டத்தில் பிணமாக மீட்பு


மாயமான விவசாயி, தோட்டத்தில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:47 PM GMT)

கோத்தகிரி அருகே மாயமான விவசாயி, ேதாட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே மாயமான விவசாயி, ேதாட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

கோத்தகிரி அருகே உள்ள தொட்டண்ணி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 65). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 4 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் பால்ராஜ் கடந்த மாதம் 11-ந் தேதி தொட்டண்ணியில் இருந்து கனாகம்பை செல்லும் சாலையில் உள்ள தனது தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் அந்த தேயிலை தோட்டம் உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்ைல. இதனால் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன பால்ராஜை தேடி வந்தனர்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையில் நேற்று முன்தினம் காலையில் கனாகம்பை கிராமத்தில் உள்ள ரவி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்கு ஓரிடத்தில் துர்நாற்றம் வீசியது. உடனே சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் அது காணாமல் போன பால்ராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடல் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பால்ராஜின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story