பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் மர்ம நபர்கள்


பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் மர்ம நபர்கள்
x

சோளிங்கர் நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டம்ளர், கப் உள்ளிடட் பொருட்களை கலெக்டர் நேரடியாக சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார். இந்த நிலையில் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் எதிரில் அப்பகுதி மக்கள் கொட்டியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், மின்சார அலுவலகம் அருகே யோக‌ ஆஞ்சநேயர் காலனி பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதே போல புலிவலம் கிராமத்தில் சாலை ஓரமாக வைக்கப்பட்ட குப்பை தொட்டியில் குப்பைகளை போடாமல் குப்பை தொட்டி அருகே பிளாஸ்டிக் பொருட்களை போட்டு தீ வைத்து மர்ம நபர்கள் எறித்துள்ளனர். குப்பைகளை தீ வைத்து எரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story