தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம்


தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம்
x

தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனத்தை தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி வட்டம் ஐங்காலபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பொது சுகாதாரத்தின் சார்பில் ரத்தசோகை விழிப்புணர்வு வாகனத்தை ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜ் எம்.எள்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் பொது சுகாதாரம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பார்வையிட்டார்.

மாவட்ட சமூக நல அலுவர் ஸ்டெல்லா வரவேற்றார். அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்திசுபாசினி திட்டங்களை விளக்கினார். 5 பள்ளி மாணவிகள், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கையேடு, துண்டு பிரசுரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருதிருமாவளவன், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதிமுனிசாமி, துணைத் தலைவர் தேவராஜ், தாசில்தார் பூங்கொடி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிங்காரவேலன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story