ஆசனூர் அருகேசாலையை கடந்து சென்ற உ


ஆசனூர் அருகேசாலையை கடந்து சென்ற உ
x

ஆசனூர் அருகே சாலையை சிறுத்தை கடந்து சென்றது.

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதை ஆசனூர் சாலையில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி ஒரு காரில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் நேற்று இரவு ஆசனூர் அருகே செம்மண்திட்டு என்ற இடத்தில் சென்றபோது ரோட்டோரம் ஒரு சிறுத்தை படுத்துக்கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். காரின் வெளிச்சத்தை பார்த்ததும் சிறுத்தை எழுந்து ரோட்டை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதனை காரில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


Related Tags :
Next Story