ஆத்தூர் அருகே பொக்லைன் எந்திரம் மோதி விவசாயி பரிதாப சாவு


தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

ஆத்தூர் அருகே பொக்லைன் எந்திரம் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகிலுள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் அருணாச்சலம் (வயது 60). விவசாயி. இவருக்கு மனைவி, 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் மாலையில் முக்காணியில் இருந்து வடக்கு நோக்கி வயலுக்கு சைக்கிளில் சென்றார். முக்காணி டாஸ்மாக் கடை அருகில் மெயின் ரோட்டில் சென்ற போது, பின்னால் வந்த ெபாக்லைன் வாகனம் மோதியதில், சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருணாசலம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சென்று அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொக்லைன் டிரைவர் முள்ளக்காடு சாமி நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரவேலை(22) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story