போடி அருகே மோட்டார்சைக்கிள் மோதி விபத்து; 2 பேர் படுகாயம்


போடி அருகே  மோட்டார்சைக்கிள் மோதி விபத்து; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:46 PM GMT)

போடி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

போடி சர்ச் தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 25). நேற்று முன்தினம் இவர் தனது தாய் கூத்தனாட்சி (54) உடன் பெரியகுளத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் போடிக்கு சென்று கொண்டிருந்தார். போடி-தேனி சாலையில் அணைக்கரைபட்டி‌ விலக்கு அருகே வந்த போது, சாலையோரம் நடந்து சென்ற துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் (34) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கூத்தனாட்சி மற்றும் ராஜ்குமார் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக கூத்தனாட்சி மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story