சின்னமனூர் அருகே மோட்டார்சைக்கிள்-கார் மோதல்; 2 பேர் பலி


சின்னமனூர் அருகே  மோட்டார்சைக்கிள்-கார் மோதல்; 2 பேர் பலி
x

சின்னமனூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

தேனி

வயல் வேலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அம்மாபட்டி நடுத்தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 65). அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற அப்பாச்சி (67). கூலித்தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் சோ்ந்து வயல் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று இருவரும் சின்னமனூர் அருேக உள்ள வயல்களில் வேலைக்கு சென்றனர்.

பின்னர் மாலை இருவரும் மோட்டார்சைக்கிளில் அம்மாபட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். சின்னமனூர்- உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் அருகே துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் சென்றபோது, எதிரே கம்பத்தில் இருந்து போடி நகரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

2 பேர் பலி

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த வெங்கடாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story