சின்னமனூர் அருகே வீட்டுக்குள் பிணமாக கிடந்த டிரைவர்


சின்னமனூர் அருகே  வீட்டுக்குள் பிணமாக கிடந்த டிரைவர்
x
தினத்தந்தி 10 Dec 2022 6:45 PM GMT (Updated: 10 Dec 2022 6:46 PM GMT)

சின்னமனூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் வேன் டிரைவர் பிணமாக கிடந்தார்.

தேனி

சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி ராயர் குல தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). வேன் டிரைவர். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஜான்சிராணி கணவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் தங்கராஜ் மன வேதனையில் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக தங்கராஜின் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி வீட்டிற்கு சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபோது தங்கராஜ் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story