கோபி அருகேவாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு


கோபி அருகேவாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு
x

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 48). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவருடைய நண்பர் சரவணன். நேற்று முன்தினம் லோகேஸ்வரன் தன்னுடைய நண்பர் சரவணனுடன் சிங்கிரிபாளையம் தடப்பள்ளி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லோகேஸ்வரனை தேடினர். இந்த நிலையில் குளித்த இடத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் பிணமாக மிதந்த லோகேஸ்வரனின் உடலை நேற்று போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story