கடமலைக்குண்டு அருகே செந்நாய்கள் தாக்கி மான் சாவு


கடமலைக்குண்டு அருகே  செந்நாய்கள் தாக்கி மான் சாவு
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:47 PM GMT)

கடமலைக்குண்டு அருகே செந்நாய்கள் தாக்கி மான் இறந்தது.

தேனி

கடமலைக்குண்டுவை அடுத்த கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேலப்பட்டி சுடுகாடு அருகே மான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு மானின் உடல் பரிேசாதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. செந்நாய்கள் தாக்கியதால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி மான் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story